articles

img

ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வெட்கக்கேடான தாக்குதல்

ந ியூஸ் கிளிக் மீதான தாக்குதலும், அதன் நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா, மற்றும் அதன்  மனிதவளங்கள் தலைவர் அமித் சக்ரவர்த்தியும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (உபா-வின்) கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, மோடி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்துவந்த இந்த ஊட கத்தை நசுக்குவதற்கான அப்பட்டமான முயற்சி யாகும்.

நியூஸ்கிளிக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தானது, மோடி அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களின் குரலை நெரிக்க எந்த எல்லைக்கும் அது செல்லும் என்ப தற்கான அச்சுறுத்தும் எச்சரிக்கையாகும். பிரபீர் புர்கா யஸ்தாவும், அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப்படு வதற்கு முன்பு, நியூஸ்கிளிக் இதழாளர்கள், ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்களின் 46 இல்லங்களில் சோதனைகள் நடந்துள்ளன. அவர்களின் மொபைல் போன்களும், மடிக்கணினிகளும் கைப்பற்றி எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. தில்லிக் காவல் துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் பலசுற்றுக் கேள்விகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.   

இதழியலை கிரிமினல் குற்றமாக மாற்றும் அராஜகம்

இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மை களை ஆராய்ந்தோமானால் அவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் உள்ள அவர்களுடைய எஜமா னர்களின் நோக்கத்தையும் குறிக்கோளையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருந்ததைக் காண முடியும். இதழாளர்களிடம், சிஏஏ எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டம், வட கிழக்கு தில்லியில் முஸ்லீம்க ளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறி யாட்டங்கள், 2021/22இல் நடைபெற்ற வீரஞ் செறிந்த விவசாயிகள் போராட்டம் முதலானவற்றை எழுதி யுள்ளீர்களா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தப் பிரச்சனைகளைப் பற்றி ‘சந்தேக நபர்களால்’ எழுதப்படுவதே, இவை குறித்து வீடியோக்கள் எடுப்பதே, அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் என்னும் வரையறைக்குள் உட்படுத்துகிறது. இவ்வாறு தில்லிக் காவல்துறையினரால் இதழியல் கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது.

நியூஸ்கிளிக் 2021இல் குறிவைக்கப்பட்டு, அமலாக்கத்துறை அதன் இணைய தள அலுவ லகத்திற்கும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா வீட்டிற்கும் சென்று சோதனைகள் மேற்கொண் டது. பண மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது அம லாக்கத்துறை குற்றஞ்சாட்டி, அதற்கெதிராக நடவ டிக்கைகளைத் தொடங்கியது. அந்த சமயத்திலேயே, நியூஸ்கிளிக், நாட்டிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி பெற்று, அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்களிடமிருந்து எப்படி நிதிகள் பெற்றது என்பதை விவரமாக அளித்தது. நியூஸ்கிளிக் ஆசிரியர் தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, பாதுகாப்பு கோரி இருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம், அமலாக்கத்துறை அவருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருந்தது. 

சீனாவின் பெயரைக் கூறி...

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் முதலீடு மற்றும் நிதி சேர்க்கப்பட்டதில் சட்டவிரோத நடவடிக்கை எதையும் மெய்ப்பிக்கமுடியாத மோடி அரசாங்கம் தன் உத்தியை மாற்றிக் கொண்டது.

ஆகஸ்ட் 5 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், அமெரிக்கக் குடிமகனும், ஒரு தொழில்நுட்பக் கம்பெனியின் முன்னாள் உரிமையாளருமான நெவில் ராய் சிங்கம் என்பவர் நிதியளித்த நிறுவனங்களில் நியூஸ்கிளிக் நிறுவனமும் ஒன்று என்றும், அது இந்திய அதிகாரிகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது. இதைத்தவிர, இவ்வாறு மேலோட்டமான குறிப்பைத் தவிர, அந்நிறுவனம் தவறிழைத்ததாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மூலம், நியூஸ்கிளிக் நிறுவனம் சீனாவிடமிருந்து நிதி பெற்ற தாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பாஜக நியூஸ்கிளிக் கிற்கு எதிராக விஷமத்தனமான தாக்குதல் (vicious attack) தொடுக்க இது ஒரு சமிக்ஞையாக அமைந்தது.  

மோடி அரசாங்கம், நியூஸ்கிளிக்கை மிரட்டுவ தற்காக சீனாவின் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது என்பது தெளிவு. இதனைத் தொடர்ந்து தில்லிக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆதாரம் ஏதுமற்ற  முதல் தகவல் அறிக்கை

பிரபீர் புர்காயஸ்தாவும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் காவல்துறையினர் அவர்களிடம் முதல் தகவல் அறிக்கையின் நகல்களை அளித்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மிகவும் அரக்கத்தனமான சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தி யத் தண்டனைச் சட்டத்தின் 153-ஏ (மதத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு குழுக்களிடையே மதப் பகைமையை ஊக்குவிப்பது), 120-பி (குற்றவியல் சதி) ஆகிய பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.  

முதல் தகவல் அறிக்கையில் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக அதி ருப்தியை உருவாக்குவதற்காக எப்படியெல்லாம் அந்நிய நாடுகளிலிருந்து நிதி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக, இந்தியாவின் இறையாண்மையை யும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் தகர்க்கும் விதத்தி லும் செயல்படும் சக்திகளால் கொண்டுவரப்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் அதில் அருணா சலப்பிரதேசமும், காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகள் அல்ல என்று காட்டிட சதி நடந்திருப்பதாகவும்   கூறு கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் எவ்விதமான ஆதாரங்களையும் அது தரவில்லை. மேலும், 2020-21இல் இந்தியாவில் நடைபெற்ற வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டமானது, “சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமான பொருள்கள் மற்றும் சேவைகளை சீர்குலைத்திடும் விதத்தில்” அயல்நாட்டின் தூண்டுதலுடன் நடை பெற்றதாகவும் இந்த முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இதன்மூலம், விவசாயிகள் போராட்டம் இழிவுபடுத்தப்பட்டு, அது ஒரு சீர்குலைவு நடவடிக்கை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

விசித்திரமான குற்றச்சாட்டு

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, சியோமி (Xiaomi) மற்றும் விவோ (Vivo) போன்ற சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் பிரச்சாரம் செய்தார் என்றும் ஒரு சட்டப்பூர்வ சமூக வலைப்பின்னலை உருவாக்க சதி செய்தார் என்றும் கூட விசித்திரமான விதத்தில் ஒரு குற்றச்சாட்டு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

மேலும் அதில் “இந்த இரண்டு சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களும், இந்த சதியின் தொடர்ச்சி யாக, பணமோசடித் தடைச் சட்டம் (PMLA-Prevention of Moneylaundering Act) மற்றும் அந்நி யச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA-Foreign Exchange Management Act) போன்ற  சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் பணத்தைக் கொண்டுவருவதற்காக ஆயிரக்க ணக்கான போலி கம்பெனிகளை (shell com panies) உருவாக்கி இருக்கின்றன” என்றும் கூறப் பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு அபாண்டமாகக் குற்றச்சாட்டைக் கூறியுள்ள அதே சமயத்தில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையோ அல்லது நியூஸ்கிளிக்கையோ இவற்றுடன் பிணைத்து எதுவும் கூறப்படவில்லை.   

சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நியூஸ்கிளிக்கை குறிவைத்திடும் மோடி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தையே முதல் தகவல் அறிக்கை வெளிப் படுத்துகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை ஏவியிருப்பதை நியாயப்படுத்துவதற்காக தேச விரோத நடவடிக்கைகள் பலவற்றுடனும் அவர் களை இணைக்கிறது.

மோகன் பகவத்தின்  மோசமான பேச்சு

நியூஸ்கிளிக்கின் மீதான நச்சுத் தாக்குதல், அது ஓர் இடதுசாரி நோக்குநிலையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இணைய தளம் என்கிற உண்மையி லிருந்தும், அது விவசாயிகள் போராட்டங்களுக்கும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களுக்கும் விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது என்பதி லிருந்தும் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில், ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத், இந்தியாவில் “இடது சுற்றுச்சூழலுக்கு” (“Left ecosystem”) எதிராக இடைவிடாது போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைப்புவிடுத்திருந்தார்.

நியூஸ்கிளிக் மீதான தாக்குதல், பத்திரிகை சுதந்தி ரத்தின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். ஆனால், அதுமட்டுமல்ல, இது, ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் குடிமக்களின் உரிமைகள்  மீதும் அதி கரித்துக் கொண்டிருக்கும் எதேச்சதிகாரத் தாக்கு தல்களின் ஒரு பகுதியுமாகும். எனவே, இது அனைத்து வீரியத்துடனும், உறுதியுடனும் எதிர்த்து முறி யடிக்கப்பட வேண்டும். அக்டோபர் 11,2023,   தமிழில் : ச.வீரமணி